திங்கள், 23 ஜனவரி, 2017

பஞ்சு டயலாக்’ பிராணிகளே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்

மதிமாறன் : மனசாட்சி இல்லாமல் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி ‘இது அரசு ஆதரவுடன் நடக்கும் போராட்டம்’ என்று தொடர்ந்து அவதூறு செய்தவர்களை அம்பலப்படுத்திய தடியடி இது. * ‘போராட்டம் முடிவுக்கு வந்தது’ என்ற பாணியிலும் கொடூரமாக தடியடி நடத்திய போலிசை ‘காவல் துறை வேண்டுகோள்’ என்று மென்மையாக சித்திரிததும் எல்லாத் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது, NEWS 7 TAMIL மட்டும், அந்த அவதூறுகளை மறுத்து மாணவர்களைப் போல் தொடர்ந்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிது. நன்றி NEWS 7 TAMIL . * பன்ஞ் டயலாக்’ சவடால்களே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் * ஜல்லிக்கட்டை ஆதரிக்கிற கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மாணவர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை கண்டித்து, சாலை மறியல், ஆர்பாட்டம் என்று உடனடியாக இன்று காலையே வீதியில் இறங்கினால், இந்தப் போராட்டம் அடுத்தக் கட்டத்தைத் தாண்டி செல்லும். மாறாக, ‘தங்களை மாணவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று காழ்ப்புணர்ச்சியோடு அமைதிகாப்பார்களேயானால் அம்பலமாகப்போவது இவர்களே. அரசியல்வாதிகளே கற்றக் கொள்ளுங்கள் அரசியலை, எம் மீனவ மக்களிடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக