ஞாயிறு, 18 டிசம்பர், 2016

வைகோ ஜெயாவிடம் பம்மல் .. கலைஞரிடம் ஆட்டம் .. ஆனால் திமுக தொண்டர்கள் ..

நேத்து வரை கட்டுமரம் எப்ப கண்ண மூடும்னவங்க எல்லாம்  "நாகரீகம்" "பண்பாடு"னு கிளாஸ் எடுக்குறானுங்க.
"நீங்கள் வைகோ விரட்டியடிக்கப்பட்டதை ஆதரிக்கலாமா? உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை," என்றெல்லாம் சில நண்பர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். நிஜம்தான். உணர்வுகளை மதிக்கிறேன். காவேரியில் விரட்டியடிக்கப்பட்டது வேறு யாராக இருந்தாலும், எச்.ராஜாவாக இருந்தாலும் முதல் ஆளாக கண்டித்திருப்பேன். அப்படியென்றால் வைகோ மட்டும் விரட்டியடிக்கப்படலாமா? என்ற கேள்வி எழும். நிற்க.
வைகோ கோ.சி.மணி இரங்கலுக்கு போனபோது அங்கேயே சலசலப்பு எழுந்துள்ளது. திமுகவினர் கோபப்பட்டிருக்கிறார்கள். நேற்று காவேரி சென்ற திருமாவளவனிடம் வைகோ வந்தால் விரட்டியடிப்போம் என திமுகவினர் கோபமாக சொல்லிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வைகோ வந்தால் தொண்டர்கள் விரட்டியடிக்க வேண்டும் என்று ஏராளமான பேர் இணைத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்கள். மோடிக்கு ஆதரவாக தான் கூஜா தூக்குவதை ஒரு கடைமட்ட மதிமுக தொண்டர் கண்டித்து பதிவு போட்டால் ஒன்பது மாவட்ட செயலாளர்களை விட்டு ஃபோன் செய்ய வைத்தும், தானே நேரடியாக ஃபோன் செய்தும் பதிவை நீக்க வைக்க தெரிந்த வைகோவிற்கு நிச்சயம் இணையத்தில் இருந்த கொந்தளிப்பு தெரியும். ஆக தனக்கெதிரான கொதிநிலை தெரிந்தேதான் இன்று கிளம்பிப் போயிருக்கிறது இழவு வீட்டிலும் திமுகவை திட்டும் இந்த சூர எலி. அது எதிர்பார்த்ததைப் போலவே திமுகவினர் விரட்டியடித்திருக்கிறார்கள்.

உடனே டி.கே.எஸ், திருச்சி சிவா உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்தார்கள். மருத்துவமனையில் இல்லாத ஸ்டாலினும் உடனே வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால் இந்த புரோக்கர், தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விரிவான அறிக்கையில் தன் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் மீது பழிபோட்டு கரித்துக் கொட்டியிருக்கிறது.
நீங்கள் உலகில் உள்ள எல்லோரையும் ஒரு தட்டில் வைப்பது போல வைகோவை வைக்க முடியாது. தான் அழிந்தாலும், தன்னைச் சேர்ந்தவர்கள் அழிந்தாலும் தனக்குப் பிடிக்காதவர்களுக்கு துன்பம் நேர்வதற்காக மட்டுமே உழைக்கும் அமேஜான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை உயிரினம் அது. அதனால்தான் அதன் மீதான தாக்குதலை ஒரு பேருக்காக, சபை நாகரீகத்திற்காக கூட கண்டிக்க முடியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேல் சிலரை விரட்டியடிக்க காரணம் தேவை. ஆனால் வைகோவைப் பார்த்தீர்களா? தன்னை விரட்டியடித்தது சரிதான் என எல்லோருமே நினைக்கும் வகையில் ஒரு விளக்க அறிக்கை கொடுத்திருக்கிறார்!! அதுதான் வைகோ!
-டான் அசோக் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக