நடிகர் சங்க விவகாரம் உள்பட பல விவகாரங்களை காட்டி அவர் அதிமுக கூட்டணிக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை ஆளும்கட்சி ஏற்படுத்திதாலேயே அவர் காரடனில் கைகட்டி அமர்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு வரநேர்ந்ததாக கூறுகின்றனர் அவர்கள். இதுதவிர மற்ற சிலவிஷயங்களும் சரத்குமாரை வளைக்க ஆளும்கட்சி கையிலெடுத்ததாகவும் இதன் பின்னணியில் பல்வேறு விசயங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தென்காசியிலும், கட்சியின் மூத்த நிர்வாகி எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபையில் ஆளும்கட்சியினருக்கு நிகராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் முதல்வர் ஜெயலலிதாவை வானுயர புகழ்ந்து தள்ளி வந்தார். இதற்கிடையே சரத்குமார் தலைவராக பதவி வகித்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வந்தது. அவரை எதிர்த்து நடிகர் விஷால் மற்றும் நாசர் ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணி சரத்குமார் அணியை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கியது.
அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சந்திக்க அனுமதி கேட்டு பல முறை போயஸ் கார்டனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்பினார். ஆனால் போயஸ் கார்டனில் இருந்து சரத்குமாருக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. எதிர்பார்த்தபடி நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியை தழுவினார். நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
சரத்குமாருக்கு திறக்காத போயஸ் கார்டனின் வாசல் கதவு நடிகர் விஷால் தலைமையிலான அணிக்கு திறந்தது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஷால் அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். நொந்து போன நடிகர் சரத்குமார் தனது கட்சியின் மூத்த நிர்வாகியும் நாங்குனேரி எம்.எல்.ஏ.,வுமான எர்ணாவூர் நாராயணனை அழைத்து இருவரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோம் என்றார். ஆனால் எர்ணாவூர் நாராயணனோ அதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
நொந்து போன நடிகர் சரத்குமார் கடந்த 5 ஆண்டுகளில் என்னை கறிவேப்பிலை மாதிரி அதிமுக பயன்படுத்திக்கொண்டது என்று விமர்ச்சிக்க தொடங்கினார். அதோடு நிற்காமல் தனது மனைவி நடிகை ராதிகா மூலம் இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். நடிகை ராதிகா திமுகவின் கனிமொழியிடம் இது பற்றி பேசினார். கனிமொழி இது பற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவிக்க இதற்கு மு.க., ஸ்டாலின் நடிகர் சரத்குமாருக்கு முன் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லை. எனவே அவர் திமுக கூட்டணிக்கு வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டார்.
இதற்கிடையே அதிமுக தலைமைக்கு உளவுத்துறையினர்.... தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள் ஆளும்கட்சியான அதிமுக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் கட்சி இடம் பெற்றால் நல்லது என்று ரிப்போர்ட் கொடுத்தனர். உடனே அதிமுக தலைமை நடிகர் சரத்குமாரை கூட்டணிக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் நடிகர் நாசர் தலைமையிலான அணியினர் முன்னாள் நடிகர் சங்கத்தலைவரான சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் நடிகர் சங்க கணக்கு வழக்குகளை ஒழுங்காக ஒப்படைக்கவில்லை. கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர் என்று அறிவித்ததோடு சென்னை போலீஸ் கமிஷனரிடமும் இதுதொடர்பாக புகார் மனு அளித்தனர்.
அதே நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியான மற்றொரு எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் சென்னை அருகே திருவொற்றியூரை கேட்டிருக்கிறார். அதிமுக தலைமை ஓகே சொல்லியிருக்கிறது.
- எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக