வெள்ளி, 9 அக்டோபர், 2015

கல்புர்கி படுகொலையில் மவுனம் : சாஹித்ய அகாதமியில் இருந்து சஷிதேஷ்பாண்டே ராஜினாமா!

பகுத்தறிவாளரும், சிறந்த கன்னட எழுத்தாளருமான
எம்.எம்.கலபுர்கி கடந்த ஆக.30-ஆம் தேதி தார்வாடில் உள்ள அவரதுவீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மௌனம் காத்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாஹித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் பதவியை 77 வயதான பிரபல எழுத்தாளர் சஷிதேஷ்பாண்டே இன்று ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை சாஹித்ய அகாதெமி தலைவர் விஷ்வநாத்திவாரிக்கு அனுப்பிவைத்துள்ளார். nakkheeran.in

1 கருத்து: