செவ்வாய், 5 மார்ச், 2013

2ஜி வழக்கில் ராசாவுக்கு பாஜக திடீர் ஆதரவு

ராசா கோரிக்கைப்படி 2ஜி வழக்கு தொடர்பாக விசாரணையை அவரிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினராக உள்ள பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.2ஜி ஊழல் வழக்கில் ராசா முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அவரை விசாரணைக்காக ஏற்கனவே அழைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தன்னையும் விசாரிக்குமாறு அவரே முன் விந்திருப்பதால், அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சின்ஹா அவருடைய கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளார்.இவரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரியும் ஆ.ராசாவின் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக