திங்கள், 3 அக்டோபர், 2011

அமுனுகம:மேற்குலகு நாடுகளின் முட்டாள்த்தனமான பொருளாதாரக்கொள்iகைகள்

மேற்குலகு நாடுகளின் முட்டாள்த்தனமான பொருளாதாரக்கொள்iகைகளை இலங்கை ஒருபோதும் பின்பற்ற்றாது! சிரேஸ்ட்ட அமைச்ச்சர் டாக்ட்டர் அமுனுகம தெரிவிப்பு


மேற்கு நாடுகளின் சில முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகளை இலங்கை ஒருபோதும் பினபற்றாது” என இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான டாக்டர் சரத்அமுனுகம தெரிவித்துள்ளார். ‘கொழும்பு திட்டம்’ அமைப்பின் 60வது நிறைவு வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போதே அமைச்சர் அமுனுகம இவ்வாறு கூறினார்.“இந்தியா, சீனா உட்பட ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள சில நாடுகள் பினபற்றி வரும்பொருளாதாரக் கொள்கைகள், சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்தவைகளை விட அதிகம்தாக்கமானவை பெறுமதியானவை. அதன்காரணமாக இன்று இந்தியாவும் சீனாவும் உலகின்சகதிமிக்க பொருளாதார மையங்களாக மாறியுள்ளன” எனவும் அமுனுகம கூறினார்.

இன்று சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி அடிப்படைத் திறன் கொண்டதாக வளர்ந்துள்ளது. ஆனால் அதன் பொருட்களை வாங்க மேற்குநாடுகளிடம் பணம் இல்லை. அப்பணத்தையும் மேற்கு நாடுகளுக்கு சீனாவே கொடுத்துஉதவுகின்றது” என்றார்.இலங்கையின் அபிவிருத்தி பற்றி அவர் குறிப்பிடுகையில், “இலங்கையைச் சேர்ந்த 1.2மில்லியன் (12 லட்சம்) மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணியாகக் கிடைக்கும் 4.5பில்லியன் கோடி ரூபா பணம், இலங்கையின் அபிவிருத்திக்கு – குறிப்பாக கிராமப்புறஅபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அமுனுகம கூறினார்.மேலும் அவர் கூறுகையில், “சீனாவைப்பொறுத்தவரை மேற்குலகுடன் ஒப்பிடுகையில்,கூடிய சனத்தொகை, குறைந்தளவு தொழில்நுட்ப வளர்ச்சி, குறைவான பயிற்சி என்பனவற்றைக்கொண்டிருந்த போதிலும், மேற்கைவிட அதிகவளர்ச்சியை ஈட்டியுள்ளது. அதற்குக் காரணம் அது பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளே.
இன்று சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி அடிப்படைத் திறன் கொண்டதாக வளர்ந்துள்ளது. ஆனால் அதன் பொருட்களை வாங்க மேற்கு நாடுகளிடம் பணம் இல்லை. அப்பணத்தையும்மேற்கு நாடுகளுக்கு சீனாவே கொடுத்து உதவுகின்றது” என்றார்.இலங்கையின் அபிவிருத்தி பற்றி அவர் குறிப்பிடுகையில், “இலங்கையைச் சேர்ந்த 1.2மில்லியன் (12 லட்சம்) மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணியாகக் கிடைக்கும் 4.5 பில்லியன் கோடி ரூபா பணம், இலங்கையின்அபிவிருத்திக்கு – குறிப்பாக கிராமப்புறஅபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது”என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக