செவ்வாய், 18 அக்டோபர், 2011

திருமணத் தேதியை விரைவில் அறிவிப்போம்: நயன்தாரா

பிரபுதேவா நயன்தாரா மீது கொண்ட காதலால் தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துவிட்டார். விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இருவருக்கும் சண்டை எனவும், திருமணம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.  தற்போது இச்செய்திக்கு விளக்கம் அளித்துள்ள நடிகை நயன்தாரா எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக ஒற்றுமையாக உள்ளோம்.இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் சிரித்தோம் என்பது உண்மை. திருமணத் தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார். எங்களின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றது என்றும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் எனவும் நயன்தாரா விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக