திங்கள், 17 அக்டோபர், 2011

பெண்ணை நெடுந்தீவுக் கடலில் தள்ளி கொலை முயற்சி

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கடலில் தள்ளி கொலை முயற்சி

இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக நடித்து திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற பெண்ணைக் நடுக்கடலில் தள்ளி வீழ்த்திவிட்டு 25 பவுண் நகைகளை அபகரித்துச் சென்றதாகக் கூறப்படும் நபரையும் படகோட்டியையும் நெடுந்தீவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை கடற்றொழிலாளர்களின் உதவியுடன் மீட்டு வந்த கடற்படையினர் நெடுந்தீவு பொலிஸாரிடம் நேற்று காலை ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இணுவில் கந்தசாமி கோயிலடியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய பெண்ணும் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த ஆண் ஒருவரும் நெடுந்தீவு நோக்கிச் சென்றுள்ளனர் இவர்களை நெடுந்தீவைச் சேர்ந்த நபர் ஒருவரே படகில் ஏற்றிச் சென்றுள்ளார்.

கடலில் படகு பயணித்துக் கொண்டிருந்தவேளை பிரஸ்தாப பெண்ணின் 25 பவுண் நகைகளையும் அபகரித்துக் கொண்டு அவரைக் கடலில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றனர் பட கோட்டியும் மற்றைய நபரும்.கடலில் நீந்தியபடி பிரஸ்தாப பெண் நீண்டநேரம் தத்தளித்துள்ளார்.

இதனைக் கண்ட கடற்றொழிலாளர்கள் கடற்படைக்குத் தகவல் கொடுத்தனர் அதைத் தொடர்ந்து பெண் மீட்கப்பட்டு நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். நெடுந்தீவுப் பொலிஸாருக்கு அந்தப் பெண் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் 25 பவுண் நகையை அபகரித்துச் சென்ற நபரும் படகு செலுத்திச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக