திங்கள், 5 செப்டம்பர், 2011

மறக்க முடிமா...? ராஜீவ்காந்தியின படுகொலையை

bala - toronto,கனடா
2011-09-05 03:21:18 IST Report Abuse
ராஜீவ்காந்தியை கொல்வது... அதிலும், தமிழ்நாட்டில் வைத்துக் கொல்லுவதென்பது ... தமக்கு எவ்வளவு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்திராத சின்னக் குழந்தைகள் அல்லர் புலிகள்! அவர்களுக்கும் இதில் பங்குண்டு என்று வைத்துக்கொண்டால் கூட , "உங்கள் பெயர் இதில் வராமல் பாதுகாப்போம்" என்று அவர்களுக்கு பொய் உத்தரவாதம் கொடுத்த அந்தக் கறுப்பாடுகள் எங்கே? அந்தக் கறுப்பாடுகளை விட்டுவிட்டு ..... சமைச்சுக் குடுத்தது... 9V பேட்டரி வாங்கிக் கொடுத்தது என்று சொல்லி அப்பாவிகளை பிடித்து தூக்கில் போட்டால் இந்தியாவின் நீதி வாழுமாம்? போங்கடா உங்கள் நீதியும் மண்ணாங் கட்டியும்......
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-09-05 03:20:43 IST Report Abuse
மிக அருமையான உண்மையை புட்டு புட்டு வைத்த கட்டுரையாக இருக்கிறது மேலே இருக்கும் கட்டுரை , உண்மையில் வெளிநாட்டில் சுகபோகமாக வாழும் இலங்கை தமிழர்கள் எங்கே தமிழ் ஈழம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தில் தினமும் அஞ்சி அஞ்சி வாழுகிறார்கள் , தனி ஈழம் கிடைத்துவிட்டால் சுக வாழ்கையை விட்டு திரும்ப போக வேண்டுமே என்ற பயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் , அப்படியே போனாலும் இவர்களின் குழந்தைகள் தனி ஈழத்தில் தமிழில் கதைக்க மாட்டார்கள் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள் , இது தெரியாமல் செங்கொடிகள் தீக்குளிக்கிறார்கள் , இளைஞர்களின் இன உணர்வை தூண்டும் பேச்சுக்களை பேசும் சீமான் போன்றவர்கள் தீக்குளிக்காமல் இருப்பதேன் ? வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தீக்குளிக்காமல் இருப்பதேன் ?
Meeran Abubacker - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-09-05 03:12:39 IST Report Abuse
உண்மையான கருத்து, கண்டிப்பாக இவர்கள் தூக்கிலிடவேண்டும். முருகன் சிறை கைதி அவன் மகள் லண்டனில் படிப்பதற்கு பணம்?இன்னும் இவர்களுக்கு விடுதலை புலிகள் தொடர்பு உண்டு. இவர்களை வெளிய வந்தால் தமிழ் நாட்டுக்கு தான் ஆபத்து
johar m - Tamilnadu,இந்தியா
2011-09-05 02:51:29 IST Report Abuse
வைகோ,ராமதாஸ், சீமான் போன்டவர்கள் வீட்டில் யாரவது இந்த குண்டுவெடிப்பில் இறந்திருந்தால் இப்படி கொகரிபார்களா. எல்லாம் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும். சும்மா ஒரு கொடியும் ஒரு மைக்கும் நாலு பேரையும் வைத்துகொண்டு எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிட்டனர் இந்த நாட்டிற்கு வேண்டாத அரசியல்வாதிகள். இந்த 3 தூக்கு கைதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இவனுகளையும் உள்ள தள்ளணும். இவனுகலாள நாடு நாசமா போச்சு. தமிழன் தமிழன் என்று சொல்லி இருக்குற தமிழனையும் கவுக்கு கொடுதிடுவானுக. தமிழ்நாடோட சாபம் இவனுக. தூக்கு தண்டனை நிறைவேற்ற படணும். அப்போ தான் தப்பு பண்ணுறவனுக்கு பயம் இருக்கும். மனித நேயம், மனிதாபிமானம் என்று சொல்வோமேயானால் கொலைகாரர்களும், கள்வர்களுக்கும் நம் நாட்டை சின்னாபின்னமாகிவிடுவார்கள் என்பது உறுதி. ராஜீவ் மற்றும் அவருடன் இறந்தவர்களுக்கு நீதி என்பது இவர்கள் மூவருடைய தூக்கு தண்டனை. ஒரு நாட்டை ஆண்ட பிரதமருடைய கொலைக்கு 21 வருட சிறைத்தண்டனை எனில் நாட்டில் உள்ள கயவர்கள் வெடிகுண்டுகளும், அரிவாளுடனும் நாட்டை சீர்குலைக்க கிளம்பிவிடுவார்கள். சிந்தித்து முடிவெடு தமிழா. உன் அரசியல் லாபத்திற்காக நாட்டை சீர்குலைகாதே
U. Moorthy - Toronto,கனடா
2011-09-05 02:51:07 IST Report Abuse
இறந்தவர்களின் சொந்தங்கள் கூறியதை பார்த்தீர்களா? இழப்பு ஏற்பட்டவனுக்குத்தான் அதனுடைய தாக்கம் , சோகம் தெரியும். மற்றவர்கள் எல்லாம் எதோ ஒரு காரணத்திற்காக கூப்பாடு போடுபவர்களே. இதை சொல்லும் போது தமிழ் உணர்வை கொச்சை படுத்துவதாக கூறலாம் . விடுதலை புலிகள் செய்த கொலைகளுக்கு கணக்கே கிடையாது. இருபது வருடங்களுக்கு முன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்ப் பிரதேசங்களான வடகிழக்கு மாகனங்களிளிருந்து புலிகள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டியபோது யாரும் மனிதாபிமானம் காட்டவில்லை. அதைப்பற்றி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் போடப்படவில்லை. எப்படித்தான் இந்த வைகோ , சீமான், நெடுமாறன், ராமதாஸ், கருணாநிதி , போன்றோருக்கு நீதி உணர்வு மனிதாபிமான உணர்வு வருகிறதோ தெரியவில்லை. சில குற்றவாளிகளுக்கு மரண தண்டனைதான் சரியானது ஆகும். நாகரிக உலகத்தில் அது சரிப்பட்டு வராது என்பது எல்லாம் பித்தலாடம்.
 
"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?"-பொன்மொழிகள்
 
Amanullah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்  
2011-09-05 00:20:09 IST Report Abuse
ராஜீவ் கொலையினை மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்று கொள்ள மாட்டான். தனக்கு வேண்டாதவர்கள் பலரையும் மிக கொடூரமாக கொலை செய்த பிரபாகரனை தமிழன் என்ற அற்ப காரணத்தினை காட்டி இங்குள்ள பலரும் அவரை உத்தம புத்திரன் என கொண்டாடுவது கொடுமையின் உச்ச கட்டம். போராளிகளுக்கு அழகு போர் களத்தில் தன்னை நேருக்கு நேர் சந்திப்பவனை நெஞ்சில் தாக்கி கொல்வது தானே தவிர இப்படி மனித வெடி குண்டுகளை வைத்து நய வஞ்சகமாக கொல்வது அல்ல. அதுவும் பிரேமதாசாவை கொல்வதற்கு ஒரு சிறுவன் மனித வெடிகுண்டாக பயன்படுத்த பட்டான். அந்த சிறுவனுக்கு அந்த வெடிகுண்டின் தன்மை தெரியுமோ தெரியாதோ என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். மரண தண்டனை கூடாது என்பதில் நமக்கு உடன்பாடு தான். அதே நேரத்தில் இந்த 3 பேரை அப்பாவிகள் என சிலர் கூறுவது எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடியாது. மணிசங்கர் அய்யர் கூறியது போல் சாகும் வரை அவர்களை சிறையில் வைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக