திங்கள், 26 செப்டம்பர், 2011

போதை விருந்து : எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் கல்லூரி மாணவ- மாணவிகள் கைது

சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் வேலூரில் சுற்றுலாத்தலமான ஏலகிரியில் தங்கும் விடுதியில் மது, விருந்து நடத்தியுள்ளனர்.

இதில் இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை, பெங்களூரில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் என 80 பேர் கலந்துகொண்ட மது விருந்தில் கஞ்சா, அபின் போன்றவையும்,பயன்படுத் தியதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100க்கணக்கான போலீசார் ஏலகிரியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுஸ், விடுதிகள், ஓட்டல்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அப்போது ஆரோவில் என்ற கெஸ்ட் அவுஸில் இந்த விருந்து நடப்பது தெரியவந்தது.  74 பேரை கைது
செய்தனர்.   இதில் 6 பேரை மற்ற அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக