திங்கள், 26 செப்டம்பர், 2011

மனோ கணேசன்: கொழும்பின் தமிழர்கள் எம்பக்கம் உள்ளனர்


இலங்கையின் கொழும்பு மாநகர முதல்வராக தாம் தெரிவுசெய்யப்பட்டால், கொழும்பில் உள்ள மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் எதுவென்று தெரியப்படுத்தமுடியும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சிறிலங்காவின் செய்தித்தாள் ஒன்றிற்கு செவ்வியளிக்கையில், கொழும்பில் வாழும் தமிழர்கள் தமது கட்சியுடனேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இதனை கருத்திற்கொண்டே தாம் கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியை ஏமாற்றியமைக்கான பிரதிபலனை ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபை தேர்தலில் பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசனின் கட்சி கொழும்பு மாநகரசபையிலும் தெஹிவளை கல்கிஸஸை மாநகர சபையிலும் போட்டியிடவுள்ளது.
இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் மனோ கணேசனின் கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஏனைய தேர்தல்களைப் போலல்லாது உள்ளுராட்சி தேர்தலில் எந்தக் கட்சி தனித்து அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைக்கலாம் என்பதால் தமது கட்சிக்கு வாய்ப்பு இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக