ஏராங்குளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் 37 இலங்கையர்கள் இன்று கேரளா பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 26 ஆண்கள், ஏழு பெண்கள்;, குழந்தைகள் நால்வரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறுபட்ட அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்கலத்திற்கு வந்து வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்வதற்காக இவர்கள் தங்கியிருந்ததாகவும் இவர்கள் தொடர்பிலான உண்மையான ஆவணங்களை தேடி கண்டறியும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறுபட்ட அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்கலத்திற்கு வந்து வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்வதற்காக இவர்கள் தங்கியிருந்ததாகவும் இவர்கள் தொடர்பிலான உண்மையான ஆவணங்களை தேடி கண்டறியும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக