ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

யாழப்பாணத்தில் கிரீஸ் மனிதனை கண்டால் அழையுங்கள் 0773588778 - 0213211257


யாழப்பாணத்தில் கிரீஸ் மனிதனை கண்டால் அழையுங்கள் 0773588778 - 0213211257
கிரீஸ் மனிதன் மனிதன் என்பது ஒரு வதந்தியே அதனை நம்பி கலகங்களை ஏற்படுத்த வேண்டாம் என யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் , அவர் கருத்து தெரிவிக்கையில்:- சமாதானத்தை விரும்பதாவர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிகக்கும் வகையில் கிரீஸ் மனிதன் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமை, கலகங்கம் ஏற்படும் போதும் அதனை தடுத்து நிறுத்த வேண்டியதும் பொலிஸாரின் கடமை. ஆனால் அதனை பொலிஸார் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துதுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்துவருவதற்கு முன்பு இராணுவம் அந்த இடத்திற்கு வருவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நேற்றிலிருந்து தினமும் மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை 6 மணி வரை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே கிறீஸ் மனிதன் ஏன்ற சர்ச்சை ஏற்பட்டதும் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டாம்.
கிரீஸ் மனிதன் என எவர் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் 0773588778 மற்றும் 0213211257 தொடர்பு கொண்டு அறிவியுங்கள் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக