ஞாயிறு, 3 ஜூலை, 2011

செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் திருமணம் இன்று காலை நடந்தது.

இயக்குநர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேத மந்திரங்கள் முழங்க, காலை 8.30 மணிக்கு கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்.

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவருக்கும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.

இன்று காலை சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அரங்கம் முழுவதும் தாமரை மலர்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே அரங்குக்கு வந்துவிட்ட செல்வராகவன் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி, தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர், திருமணத்துக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர்.

பின்னர் திருமண சடங்குகள் தொடங்கின. கிட்டத்தட்ட 1 மணி நேரம் வேதம் ஓதப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு கீதாஞ்சலி கழுத்தில் தாலி கட்டினார் செல்வராகவன். வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமணத்துக்கு நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் திரண்டு வந்திருந்தனர்.

தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார், ஏசி சண்முகம், தயாரிப்பாளர்கள் ஏவி எம் சரவணன், எம்எஸ் குகன், ஏஎம் ரத்னம், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், பிரபு, இயக்குநர் மணிரத்னம், சுகாசினி, நடிகர்கள் அரவிந்தசாமி, ஷோபனா, இசையமைப்பாளரம் ஜிவி பிரகாஷ்குமார், முன்னாள் கமிஷனர் ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமண வரவேற்பு நாளை மாலை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடக்கிறது.

இந்தத் திருமணத்தில் ரஜினியின் மருமகனும் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா தனுஷ், பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
Director Selvaragavan - Geetanjali marriage was held at Chennai Le Royal Mridian Hotel today at 8.30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக