ஞாயிறு, 5 ஜூன், 2011

தனியார் பஸ் வண்டிகளின் அடாவடித்தனம் சொல்லி மாளாது

தனியார் பஸ் போக்குவரத்தின் மீது 17,309 முறைப்பாடுகள்

தனியார் பஸ் போக்குவரத்தின் மீது இதுவரை சுமார் 17,309 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக போக்குவரத்து முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக கட்டணம் அறவிடல், பயணிகளுடன் தவறான விதத்தில் உரையாடல் மற்றும் பயணச்சீட்டு வழங்காமை என்பன உள்ளடங்களாக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை - கொழும்பு மற்றும் கொழும்பு - அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுங்கிடையிலான தனியார் பஸ் போககுவரத்தின் மீதே அதிக முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் முறைப்பாடு செய்யப்பட்ட 41 பஸ்களின் அனுமதி இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக