ஞாயிறு, 5 ஜூன், 2011

கலைஞர் ஏன் கண்ணீர் விட்டார்? : திருச்சி சிவா



திருவாரூரில் இன்று இரவு (5.6,2011) திமுக சார்பில் கலைஞர் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி சிவா, ’’தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது நாங்கள் தலைவருடன் இருந்தோம். தலைவருக்கு கீழே நாங்கள் எல்லோரும் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தோம்.
தேர்தல் முடிவுகள் தெரியவந்தபோது தலைவரைப்பார்த்தேன்.   அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அந்த கண்ணீர், தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.
அப்போது கண்ணீருடன் தலைவர் கேட்டார், ‘’குடிசை வீடுகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக்க வேண்டும் என்று துடித்தோமே. இனி அந்த திட்டம் தொடருமா?’’ என்று கேட்டார்.
அவர் சந்தேகமாக கேட்டதுபோலவே, அந்த திட்டத்தையும் அகற்றிவிட்டார்கள்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக