ஞாயிறு, 26 ஜூன், 2011

புலிகளின் பணம் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும்- கேபி

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரும் பணம் யார் யாரிடம் உள்ளது என்ற விவரம் எனக்குத் தெரியும் என்று கேபி கூறியுள்ளார்.

 விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரும் பணம் தற்போது யார் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மிகப் பெரிய அளவில் பணம் இருந்தது. அந்தப் பணம் தற்போது யார் வசம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை மீட்டு அதை தமிழ் மக்களின் நல வாழ்வுக்காக செலவிட விரும்புகிறேன். ஆனால் பணத்தை மீட்பது மிகப் பெரிய பணி, சவாலானதும் கூட. இருப்பினும் இதைச் செய்ய நான் விரும்புகிறேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நான் மலேசியாவில் வசித்து வந்தபோது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினேன். ஆனால் அது இப்போது பழைய கதை. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டிய முக்கியக் கடமை நம் முன் உள்ளது என்றார் கேபி.

English summary
Kumaran Pathmanathan alias KP has said that he knows where the large haul of cash of the group is being kept and with whom following Tigers' defeat in 2009. "I know who is having the large sums of money belonging to the LTTE. I know this will be a difficult job but I will try to find that money in order to help Tamil people," he was quoted as saying by the BBC. KP was arrested in 2009 after the Eelam war ended.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக