திங்கள், 20 ஜூன், 2011

கிழக்கு மாகாணத்துக்கு இந்திய நன்கொடை

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் விதவைகளானவர்களுக்கு சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்திய அரசினால் முதற் கட்டமாக 203 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக கிடைத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார துனை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையில் யுத்த விதவைகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலேயே “சேவா இந்தியா ” அமைப்பின் ஊடாக நடை முறைப்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறுகின்றார்.
இத் திட்டத்தை நடை முஐறப்படுத்துவதற்கென 50 இளைஞர் யுவதிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்டப்டு அடுத்த வாரம் இந்தியாவிலுள்ள “சேவா இந்தியா” அமைப்பின் ஊடாக பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும், அவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் 800 இளம் விதவைகளுக்கு அவர்கள் ஊடாக சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் வாயப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்த துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
ஆடைத் தொழில், கணிணீ, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி, உணவு பதனிடல், கால் நடை வளர்ப்பு உட்பட 8 துறைகள் குறித்த சுய தொழில் வாயப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயிற்சியின் பின்னர் மாதமொன்றிற்கு ஆகக் குறைந்ததது ரூபா 15 ஆயிரம் குறித்த குடும்பத்தினால் வருமானத்தை பெறக் கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு மேலதிகமாக வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் யுத்த விதவைகளுக்கு சுய தொழில் வாயப்புகளை வழங்க தனது அமைச்சு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக