Also, close to 100 kilograms of gold and 307 kilograms of silver was found - which will be handed over to central excise.
Other important souvenirs will be exhibited later. All valuables will be sent to SBI for safekeeping.
சத்ய சாய்பாபாவின் தனி அறை திறந்து பார்க்கப்பட்டபோது, அதில் 98 கிலோ தங்கமும், ரூ.12 கோடி ரொக்கமும், 307 கிலோ வெள்ளியும், 4 தங்க சாமி சிலைகளும் இருந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமத்தில் சாய்பாபா மட்டும் பயன்படுத்தும் யஜுர் வேத மந்திர் என்ற பகுதி இருக்கிறது. சாய்பாபா உடல் நலம் குன்றி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும், கடந்த ஏப்ரல் 15 ந் தேதி இந்த பகுதியை பூட்டு போட்டு பூட்டி விட்டனர்.
இந்த நிலையில் சாய்பாபாவின் சகோதரர் ஜானகி ராமனின் மகனும், அறக்கட்டளை உறுப்பினருமான ரத்னாகர் கூறியதாவது:
சத்ய சாய்பாபாவின் அறையை திறந்து பார்த்தோம். அதில் இருந்த பணத்தை வங்கி அதிகாரிகளை கொண்டு 36 மணி நேரமாக எண்ணி முடித்து விட்டோம். இதன் படி மொத்தம் 11 கோடியே 86 லட்சத்து 47 ஆயிரத்து 409 ரூபாய் இருந்தது.
மேலும் 98 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும். தங்கத்தால் ஆன ராமர், ஆஞ்சநேயர், விநாயகர், மகாலட்சுமி சிலைகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 10 செ.மீ. உயரம் இருக்கின்றன. மற்றும் 2 தங்க பாதுகைகளும் இருந்தன. இது தவிர ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 307 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன. அவற்றை பாதுகாப்பாக வைத்து இருக்கிறோம். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் கொடுத்து இருக்கிறோம்.
சத்ய சாய்பாபாவின் சமாதியை அழகுற கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த சமாதி வரும் ஜுலை 15 ந் தேதி திறக்கப்படும். அத்துடன் சாய்பாபா பயன்படுத்திய பொருட்களை கொண்டு கண்காட்சி ஒன்றை அமைக்கிறோம். அதுவும் ஜுலை 15 ந் தேதி திறக்கப்படும்.
பாபாவின் அறையில் அவர் எழுதி வைத்த உயில் எதுவும் இல்லை. இவ்வாறு ரத்னாகர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக