செவ்வாய், 23 நவம்பர், 2010

யாழ். பல்கலை மாணவன் பகிடிவதையால் தற்கொலைக்கு முயற்சி

சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்குட்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனொருவர் அதிக தூக்கமாத்திரைகளை உட்கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆவார்.

பல்கலைக்கழக விடுதியில்வைத்து அதிக தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தாக தெரிவிக்கப்படுகிறது. சக மாணவர்களால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக