செவ்வாய், 2 நவம்பர், 2010

ராகுல், அருந்ததி மீது வழக்கு

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மற்றும் சமூக ஆர்வலர் அருந்ததி ராய் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.ராஞ்சியைச் சேர்ந்த ஆஷிஷ் சிங், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர். "சிமி'யைப் போல, ஆர்.எஸ்.எஸ்.,  ஒரு பயங்கரவாத அமைப்பு என்று, காங்., பொதுச் செயலர் ராகுல் விமர்சித்ததால், அவர் மீதும், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அருந்ததி ராய் பேசியிருப்பதால், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ பிரிவின் கீழ் அவர் மீதும், ராஞ்சி நகர, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆஷிஷ் சிங் வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்வழக்கின் தகுதி குறித்து, இம்மாதம் 22 மற்றும் 24ம் தேதிகளில் விசாரணை நடத்துமாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக