இந்நிலையில் போத்தல ஜெயந்தவுக்கு சர்வதேச விருதொன்று வழங்கப்படுகிறது.’இலங்கையின் அரச ஊடகத்தில் பணியாற்றிய போது ஊழல்களுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் என்னால் போராட முடிந்தமை குறித்து மகிழ்வடைகின்றேன். ஆனால் அதன் விளைவாக நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது, கவலையளிக்கிறது என போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார்.
சுமார் 214 நாடுகளை சேர்ந்த 1,200 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட விருது வழங்கும் விழா நேற்று பேங்கொக்கின் ஷ்ரிகித் நேஷனல் கன்வென்ஷன் செண்டரில் இடம்பெற்றது.போத்தல ஜெயந்தவினால் கலந்துகொள்ள முடியாது போனதால், அவருக்கு பதில் விருதினை இயக்குனர் ஜேசி வெலி அமுன பெற்றுக்கொண்டார். 2000ம் ஆண்டிற்கான நேர்மைக்கான விருது சண்டே லீடர் பிரதான ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக