ஞாயிறு, 7 நவம்பர், 2010

தடுப்பு காவல் கைதிகளின் குடும்பத்தவர்களை தொடர்புகொள்ள மனோ கணேசன் அழைப்பு!!

கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, பதுளை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, உள்ளிட்ட சிறைச்சாலைகளிலும் மற்றும் பூசா தடுப்புமுகாமிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தடுப்புகாவல் கைதிகளின் குடும்பத்தவர்களை தொடர்புகொள்ளும்படி மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது முழுப்பெயர், அடையாள அட்டை இலக்கம், கைது செய்யப்பட்ட திகதி, தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அல்லது முகாம், குடும்ப அங்கத்தவரது தொடர்பு விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை மக்கள் கண்காணிப்புக்குழு தபால் பெட்டி இலக்கம் 803 கொழும்பு அல்லது இல.72 பங்ஷல் வீதி, கொழும்பு 11 என்ற விலாசத்திற்கு அல்லது dpf@sltnet.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி மக்கள் கண்காணிப்புக்குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக