வெள்ளி, 26 நவம்பர், 2010

சில புலி நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை

இன்று காலை இனந்தெரியாத சில புலி நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் காணால் போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் தலைவர் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுடரை ஏற்றும் வகையிலான புகைப்படத்துடனேயே மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன. இதனிடையே பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளில் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது இது குறித்த தகவல்களை தெரிவிக்கவோ மறுத்து விட்டது. புலி செயற்பாடுகள் இருக்கும்வரை இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால தடைசட்டம் நடைமுறையில் இருக்கும். மக்களே சிந்தியுங்கள் புலி பயங்கரவாதத்தை இல்லாத செய்தால் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக