ஞாயிறு, 24 அக்டோபர், 2010

விமான ஒட்டிகள் பற்றாக்குறையால் பயணங்களை ரத்து செய்யும் நிலை!


ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமானத்தின் சேவைகளை ஒழுங்காக வழங்கவதற்குரிய விமான ஒட்டிகள் இல்லாமல் பயணங்களை ரத்து செய்ய வேண்டிய நிலையில் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான ஒட்டிகள் பற்றாக்குறையால் இன்று அதிகாலை 2:00 மணிக்கு லண்டன் புறப்பட வேண்டிய யு.எல்:505 விமான சேவையும், கடந்த வெள்ளிக்கிழமை ரோம் செல்லவேண்டிய யு.எல்:571 விமான சேவையும், ஜப்பானின் நரிற்றா செல்லவேண்டிய விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
சர்வதேச விமான பறப்பு சட்டங்களுக்கு அமைய விமானியொருவர் வருடமொன்றுக்கு 900 மணித்தியாலங்களிற்கு மேல் பறக்ககூடாது என்ற விதிமுறைகளை மீறி ஸ்ரீலங்கன் விமானசேவையின் விமானிகள் 900 மணித்தியாலங்களிற்கு மேலாக பறக்கின்றனர்.
விமான பறப்புகள் ரத்து செய்யப்பட்டமை குறித்து கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தின் ஸ்ரீலங்கன் விமானத்தின் பணிப்பாளரிடம் வினாவியதற்கு பறப்புக்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் விமான பயணங்களை ரத்து செய்யவும், தாமதமாக புறப்படவும் வேண்டி எற்பட்டதாகவும் தெரிவித்ததுடன், லண்டனுக்கான விமானம் யு.எல்:509 இன்று காலை 11 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன். மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக