ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மூவர் பலி, கடல் வழியாகப் பயணம் செய்த 87 இலங்கையர்களும்

ஆஸி. நோக்கி பயணித்த 87 இலங்கையரின் பயங்கரமான அனுபவம் மூவர் பலி; நத்தை, மீன்களை உண்டு மழைநீரைக் குடித்தனராம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்காக  கடல் வழியாகப் பயணம் செய்த   87 இலங்கையர்களும் இந்தோனேஷியா பெனைடன் தீவில்   வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக  இந்தோனேஷியாவின்   மடைம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாங்கள் எதிர்நோக்கிய பயங்கர அனுபவங்களை அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளதுடன், படகு   சேதமுற்று நீர், உணவு தீர்ந்து  விட்ட நிலையில்  மூவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
அவர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து அவுஸ்திரேலியாவின்  ‘த டெய்லி டெலிகிராப்’  என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: படகின் இயந்திரம் பழுதடைந்து எரிபொருள் தீர்ந்து விட்ட நிலையில் தாம் கிறிஸ்மஸ் தீவை நெருங்கியிருந்ததாக படகிலிருந்த தமிழ் மக்கள் அனைவரும் நம்பியிருந்தனர்.
பின்னர், உணவு தீர்ந்துவிட்ட  நிலையில்   தாம் பிடித்த  மீனை உணவாகவும்     படகில் விழும் மழை நீரைக் குடிப்பதற்கும் பயன்படுத்தி   பயங்கரமான 30 நாட்களை கடலில் இலக்கின்றி மிதந்து தத்தளித்துக் கழித்துள்ளனர்.   இதேவேளை,    அவர்கள் மீட்கப்பட்ட   கிற கற்றவ் எரிமலைக்கு   அண்மையிலுள்ள   பெனைடன்     தீவில் தரையைத் தட்டுவதற்கு முன்னர்   தாம்   இந்தோனேஷியக்   கடல் எல்லைக்குள்   வந்து விட்டதாக   அவர்கள்  நினைத்துள்ளனர்.
இந்நிலையில் தமது சேதமுற்ற படகுக்கு அருகிலிருந்த   மீன்பிடிப் படகை  உதவிக்கு அழைப்பதற்காக நீந்திச் செல்ல முற்பட்ட வேளையில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உரியிழந்தனர்.      படகு தரையைத் தட்டிய போது பாறையுடன் மோதுண்டு இன்னொரு யுவதி உரியிழந்துள்ளார்.      இறுதியில் இந்தோனேஷிய கடல் காவல் துறையினரால் இவர்கள் காப்பாற்றப்பட்ட போது 2 வயது தொடக்கம்    14 வயது வரையான சிறுவர்கள் இந்தக் குழுவில் அடங்கியிருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மெராக் துறைகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஜகார்த்தாவிலுள்ள தடுப்பு முகாமிற்குக் கூட்டிச்செல்லப்படுவதற்கு முன்னர் நியூஸ் லிமிட்டெட் இந்தக் குழுவினரை செவ்வி காண கடல் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
மிகவும் வாடிய தோற்றத்துடன் சில சிறுவர்கள் அழுதுகொண்டு தமது நோய்கள் பற்றி வந்தவர்களிடம் முறையிட்டனர்.   ஏனையவர்களிடம் எந்த உடைமைகளோ இருக்கவில்லை.    தனது நாட்டில் குண்டுத் தாக்குதலால் கையில் ஏற்பட்டிருந்த    பயங்கரமான  வடுவைக் காட்டிய பெண் ஒருவர்,   இதனாலே தான் தனது கணவனுடனும், இருபிள்ளைகளுடனும் அந்த நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.   தனது தாயாரும், தானும் படகில் வந்ததாகவும் தனது தந்தை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் சிறுவன் ஒருவன் கூறினான்.     செயற்கைக்காலுடன் இருந்த     இன்னொருவரும் தானும் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித் தார்.
தாம் ஏற்கனவே இது பற்றி ஜகார்த்தாவிலுள்ள அவுஸ்திரேலிய பொலிஸுக்குத் தெரிவித்திருப்பதாகவும் இவர்கள் ஜகார்த்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவுஸ்திரேலிய    பெடரல் பொலிஸ் மேலதிக நடவடிக்கைகளை   மேற்கொள்ளும்   எனவும் பெனைடன் கடல் காவல்துறையின் தலைமை அதிகாரி புடிகேர்மன் தெரிவித்தார்.
தமது காவல்துறையினர் இந்தக் குழுவைக் கண்டபோது அவர்கள் மிகவும் பலவீ னமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
15 பெண்களையும், 18 சிறுவர்களையும் உள்ளடக்கிய இந்தக் குழுவினர்  இந்தோனேஷிய   குடிவரவுத் திணைக்களத்தின் தடுப்புமுகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய அதிகாரிகளால் தடுத்துநிறுத்தப்பட்ட இரண்டாவது புகலிடம் கோருபவர்களின் படகு இதுவாகும். ஆப்கானியர்கள், ஈராக்கியர்கள் மற்றும் ஈரானியர்களைக் கொண்ட இன்னொரு படகு யோக் ஜகார்த்தாவில் வைத்து வார இறுதியில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது இலங்கையிலிருந்தது ஓகஸ்ட் 31 இல் புறப்பட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கடல் காவல்துறை தலைமை அதிகாரி புடிகேர் மன் தெரிவித்தார்.    இலங்கையிலிருந்து ஆட்களைக் கடத்துபவர்களுக்கு அவர்கள் 200 அமெரிக்க டொலர்களை கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.  சிறுவர்களுக்கு பணம் அறவிடப்படவில்லை.
அவர்களின் கருத்துப்படி இந்தப் படகு மன்னாரிலிருந்து புறப்பட்டிருப்பதுடன் அவர்களில் படகு பற்றித் தெரிந்தவர்களே ஓட்டுநர்களாக இருந்துள்ளனர்.   இலங்கையிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்வதற்கு 15 நாட்கள் தேவை என தமக்குக் கூறப்பட்டிருந்ததாகவும் 15 நாட்கள் எல்லாம் சுகமாகவே சென்றதாகவும் படகை ஓட்டிய 29 வயதுடைய ராஜவர்ணம் தெரிவித்தார்.
இயந்திரக்கோளாறு ஏற்பட்டு இறுதியாக எரிபொருள் முடிவடைந்தபோது,        தாம் கிறிஸ்மஸ் தீவுக்கும் அவுஸ்திரேலிய மண்ணுக்கும் அண்மையில் இருந்ததாக அவர் நம்புகிறார். பின்னர் படகானது காற்றினால் இலக்கின்றி மிதந்துள்ளது.   இறுதியாக உணவும் நீரும் முடிவடைந்த நிலையில் அனைவருக்கும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு அவதியுற்றுள்ளனர்.
மழைபெய்த போது மட்டுமே அவர்களுக்கு நீர் கிடைத்தது. அதுவும் ஒவ்வொரு நாளும் கிடைக்கவில்லை.   கிறிஸ்மஸ்தீவை நாம் தவறவிட்டு இரண்டாவது நாள் எரிபொருள் முடிவடைந்துவிட, வெறுமனே கடலில் மிதந்து கொண்டிருந்தோம் என்றார் ராஜவர்ணம்.     அடுத்த 30 நாட்கள் நாம் உயிருடன் இருப்போம் என்பது எமக்குத் தெரியாதிருந்தது மிகவும் மோசமானது யாதெனில் நாம் வாழ்வோமா அல்லது சாவோமா என்ற பயமே என்று கூறினார்.
இறுதியாக பெனைடன் தீவை அடைந்த போது அவர்கள் அந்தத் தீவில் கிடைத்த நத்தை, தேங்காய், பழங்கள் மற்றும் தானியங்களை உட்கொண்டனர். இந்நிலையில் காட்டில் வேலை செய்பவர்கள் அவர்களைக் கண்டு பொலிஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதேவேளை, இன்னும் 15 பேர் அந்தத் தீவில் இருப்பதாகவும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காகவே தாம் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் அவர்கள் அவ்வாறு வெளி யேறாவிட்டால் தமக்கோ, தமது பிள்ளைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்றே தாம் அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவீச்சினால் மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட தனது கையை ஸ்ரீதேவி எமக்குக் காட்டினார். அவர் தனது கணவன், மகள் மற்றும் மகனுடன் படகில் வந்திருந்தார். தமக்குத் தற்போது என்ன நடக்கும்   என்று தெரியாதபோதும் தாம் ஒருபோதும் திரும்பி இலங்கைக்கு போகப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.  தமக்கான எதிர்காலம் அவுஸ்திரேலியாவி லேயே கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
நாம் அங்கு நன்றாக வாழமுடியாது.      நான் எனது அம்மாவுடனும் அப்பாவுடனும் சந்தோசமாக, அமைதியாக வாழ்ந்து கல்விகற்க விரும்புகின்றேன். நாம் அவுஸ்திரேலியாவுக்குப் போக விரும்புகின்றோம். எனது வாழ்க்கை அவுஸ்திரேலியாவிலேயே இருக்கவேண்டும் என அழகான ஆங்கிலத்தில் ராதாகீதன் எனும் சிறுவன் கூறினான்.
எதிர்காலத்திற்காகவும் வாழ்விற்காகவுமே தான் தனது மகனின் வாழ்க்கையை ஆபத்திலும் அழைத்துவந்ததாகவும் அவனது தாயார் கீதா தெரிவித்தார்.   அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவிரும்பு வதற்கான காரணத்தைக் கேட்டபோது, எனது வாழ்க்கைக்காகவும் எனது பிள்ளையின் வாழ்க்கைக்காகவும் அங்கு செல்லவிரும்புவதாக அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக