திங்கள், 13 செப்டம்பர், 2010

காங்கிரஸுக்கு 110 தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும்-இளங்கோவன்

தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 110 தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ராமேஸ்வரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு என் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரால் என்னை எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு என் மீது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்திருத்த வேண்டும். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உரிய அதிகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

1980-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவியாக இந்திராகாந்தி இருந்தார். அப்போது தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 110 தொகுதிகளிலும், தி.மு.க. 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அந்த நிலை வருகிற தேர்தலில் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ராமேசுவரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் கட்டமைப்பு வசதி களுக்காக ஏற்கனவே மத்திய அரசு ரூ.10.5 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் ரூ.11 கோடி மத்திய அரசு மூலம் ஒதுக்கப்படும்.

மத்திய அரசு வழங்கி வரும் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு தாங்களே செய்து வருவதாக தெரி விக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செய்வதாக கூறுவது ஏற்கக்கூடியது அல்ல.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் ஆகியோர் விரைவில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வழிபிறக்கும்.

தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்குமா என்று என்னிடம் கேட்டால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே எனது பதில் என்றார் இளங்கோவன்.
பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 13 Sep 2010 5:02 am
டேய் இளங்கோவா , உனக்கு சாதாரண mp ஆக முடியல. நீ பேசுறியா .

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 13 Sep 2010 3:12 am
இளங்கோ, கேக்கறதோ கேக்கற ஒரு 500 தொகுதியாவது கேகவேண்டயதுதானே?

பதிவு செய்தவர்: வித்தி
பதிவு செய்தது: 13 Sep 2010 2:40 am
தமிழனை அழிக்க நினைக்கும் ஒரு தெலுங்கன்.
பதிவு செய்தவர்: குரு
பதிவு செய்தது: 13 Sep 2010 2:10 am
அம்மாவுக்கு தமிழனை அழிக்க கூட உதவி செய்தேன் .அதை அவங்கள் மறக்க மட்டங்கள் .என்னோடுதான் கூட்டணி .யார் என்ன சொன்னாலும் அம்மா என் கூட தான் கூட்டணி

பதிவு செய்தவர்: supramaniyasamy
பதிவு செய்தது: 13 Sep 2010 2:10 am
நடக்ககூடிய செய்தியை சொல்லேண்டா பண்டாரம் .. சட்டம் ஒழுங்கு சரியில்லையா தமிழ்நாட்டில் ? முழு இந்தியாவிலும் இல்லையடா பரதேசி ...

பதிவு செய்தவர்: தொண்டைமான்
பதிவு செய்தது: 13 Sep 2010 1:36 am
ஆமா ஈழத்தமிழரை பாதுகாக்க பிரணாப் முகர்ஜி ஸ்ரீலங்கா சென்று பேச்சு வார்த்தை நடத்தியதைப் போல் தமிழக மீனவரை பிரணப் முகர்ஜி , கிருஷ்ணா வும் பேச்சு வார்த்தை நடத்தி பாத்து காப்பவர்கள். யாருக்கு பூ வைக்கிறார் இளங்கோவன்.;
பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 13 Sep 2010 1:15 am
இவங்களும் விஜயகாந்தும் கூட்டு சேர்ந்தா, மரம் வெட்டி தனியா ஒரு பக்கம், ங்கொய்யால கிழவனுக்கு கொண்டாட்டம் தான். உருப்படாத மதிமுக, கொக்கிகள், மற்றும் கொடநாடு கோஷ்டி எல்லாம் சேர்ந்து கும்மியடிக்கலாம்

பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 13 Sep 2010 1:08 am
பாவம் இளங்கோவன், முடிவு எடுக்கும் உரிமையை சோனியாவுக்கு கொடுத்துவிட்டு பப்பரபென்னு உக்கார்ந்து இருக்க போகிறார். தேர்தல்ல தோத்தவநெல்லாம் எதுக்கு பேசுறான். ங்கொய்யால....

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 13 Sep 2010 12:44 am
அது சரி, 110 தொகுதியிலையும் நிக்க ஆள் வேணுமே. அவ்வளவு பேருக்கு காங்கிரஸ் எங்க போகும்???

பதிவு செய்தவர்: நெப்போலியன்
பதிவு செய்தது: 13 Sep 2010 12:33 am
யார் வேண்டாம் என்பது தமிழ்நாட்டின் எல்லாதொகுதிகளிலும் போட்டிபோட்டுக்கோ வேணுமானால் ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சீனாவிலும் பொய் போட்டி போட்டுக்கோ இத்ஹாளியில் உ னது பாட்டி வீட்டிலும் பொய் போட்டுக்கோ unathu

பதிவு செய்தவர்: தங்கபாலு
பதிவு செய்தது: 13 Sep 2010 12:21 am
ஏன் சோனியாவுக்கு எனதும் இளங்கோவனுதும் கம்பி போதவில்லையா அவளுக்கு 110 கம்பி தேவைபோல கருநாய் நிதியால் முடியவில்லை சிங்காலும் முடியவில்லை அவளும் என்ன செய்ய ?

பதிவு செய்தவர்: வெற்றி நமதே
பதிவு செய்தது: 12 Sep 2010 11:13 pm
செல் போன் முலம் முடிவுகளை மாற்றி அமைக்க முடியுமென்று சொல்லியது சரிதான் போன்று உள்ளது. அடுத்தமுறை காங்கிரஸ் ஆட்சிதான். தமிழ் நாட்டிலும் ஹிந்தியை திணிக்க வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளான்.

பதிவு செய்தவர்: பத்திரிக்கையாளர்கள்
பதிவு செய்தது: 12 Sep 2010 11:06 pm
நேற்று செய்தி சேகரிக்க சென்ற சில பத்திரிக்கையாளர்கள் மீது காவல் துறை உதவி ஆணையர் தரக் குறைவாக திட்டியும் அடித்தும் விரட்டியடித்துள்ளார், இந்த செய்தியை இந்தப் பத்திரிக்கை போடாது, விவேக் ஏதாவது சொன்னால் மட்டும் பொங்கி எழுவான் இந்த ஆசிரியன் ஆளுங் கட்சி ஜால்ரா

பதிவு செய்தவர்: தொண்டன்
பதிவு செய்தது: 12 Sep 2010 11:02 pm
தலைவா... உன்னை விட்டா கிழவனுக்கு குடைச்சல் கொடுக்க தமிழ் நாட்டில் ஆளே கிடையாது. புகுந்து விளையாடு தலைவா.

பதிவு செய்தவர்: சுப்ரமணியன்
பதிவு செய்தது: 12 Sep 2010 10:55 pm
இளகோவன்,சுப்ரமணிய சுவாமி இருவரும் தமிழ்நாட்டு இக் கிடைத்த தெறமை வாய்ந்தே காமெடி நடிகர்கள் .அவர்கள்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் ஏறுகிறது .குட் லக் .

பதிவு செய்தவர்: kaipulla
பதிவு செய்தது: 12 Sep 2010 10:44 pm
வர்றவன் போறவனுக்கெல்லாம் மாத்திரை கொடுத்தா என் பொழப்பு என்னாவுறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக