வெள்ளவத்தையில் தமிழர் மட்டும் பதிவு செய்யப்படுவதற்கு மனோ கணேசன் கண்டனம்!
வெள்ளவத்தை பிரதேச தமிழர்கள் மட்டும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்தே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை மட்டும் பதிவு செய்யும் இத்தகைய நடவடிக்கை மூலம் இன ஐக்கியத்திற்குப் பங்கம் ஏற்படக் கூடுமென மனோ கணேசன் கடிதம் ஒன்றின் மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக