வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

 ஜப்னா முஸ்லீம் .காம் : முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். 
அவர் இன்று (22)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணிலின் மனைவியும் கைது செய்யப்படுவாரா..?
இலங்கையினுடைய  வரலாற்றில் முதன்முறையாக   முன்னாள் ஜனாதிபதியொருவர் கைது  செய்யப்பட்டிருக்கின்றார். 
தன்னுடைய மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக லண்டன் சென்றிருந்த நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதனடிப்படையில், இன்றையதினம் CID ற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த  ரணில் இன்று (22) கைது செய்யப்டார்.  



ரணிலின் மனைவியின் பட்டமளிப்பு விழா என்பதாலும், அவரும் அரச நிதி தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற அடிப்படையில் கைது படலாம் தொடரலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ரணிலின் கைது குறித்து, அலி சப்ரி
இலங்கையை 3 முக்கியமான சந்தர்ப்பங்களில் நிலைப்படுத்தி, மீண்டும் உயிர்ப்பிப்பதில் ரணில்  தீர்க்கமான பங்கை வகித்துள்ளார்.
 1993 இல், ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் படுகொலைக்குப் பிறகு,  ஆட்சியின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நாடு அராஜகத்திற்குள் செல்வதைத் தடுத்தார்.

 2000 இல், நாடு அதன் முதல் மந்தநிலையை எதிர்கொண்டபோது, ​​அவர் வளர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுத்தார்.

 2022 இல், நமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில், ரணில் தலைமை தாங்கி இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தார்.

இந்தப் பின்னணியில், ஒரு யூடியூபர் கணித்தபடி அவர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் நமது நிறுவனங்களையும், நமது எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பழிவாங்கும் மற்றும் அழிவுகரமான அரசியலின் தொந்தரவான போக்கை பிரதிபலிக்கின்றன.

வெறுப்பு மற்றும் பழிவாங்கும் இந்த சுழற்சி முடிவுக்கு வர வேண்டும். இலங்கை பகுத்தறிவு, ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் மீண்டும் பாதுகாத்தவர்களுக்கு நன்றி செலுத்தும் அரசியலுக்கு தகுதியானது.

(முன்னாள் அமைச்சர் அயி சப்ரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக