செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

இலங்கை பணிப்பெண்களால் 4.43 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது

 இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் மகளிர் மூலம் கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது 
இதே கால அளவில் அந்நிய நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே அந்நிய செலாவாணியாக கிடைத்துள்ளது .
இப்படி கிடைக்கும் அந்நிய செலாவணியை இறக்குமதியாளர்கள் என்ற என்ற கமிஷன் வியாபாரிகளுக்கு தாரை வார்த்து விடுகிறது அரசு 
அதிலும் அவசியமில்லாத ஆடம்பர பொருட்களுக்கே  அதிக அந்நிய செலாவணி விரயமாகிறது 
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய கோழி முட்டை உப்பு மீன் கருவாடு டின்மீன் போன்றவற்றையும் கூட அந்நிய செலாவணியை விரயம் செய்து இறக்குமதி செய்கிறார்கள் ( கமிஷன் + லஞ்சம்)
அதின் பின்பு உலக நாடுகளில் கந்து வட்டிக்கு கடன் வாங்கும் தில்லாலங்கடி வேலைதான் நடக்கிறது 


எந்த காலத்திலும் திருந்தாத தேசங்கள் 

மலையோரம் செய்திகள் :  நாட்டிற்கு கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அள்ளிக் கொட்டும் பெண்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர்.
அதிகூடிய டொலர் வருமானம்
கடந்த ஏழு மாதங்களில் இலங்கைக்கு நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஏழு மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் 2.23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும் அதில் கணிசமான அளவு பிரச்சார மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக மீண்டும் வெளிப்பாய்ச்சப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் மத்திய கிழக்குப் பணியாளர்களே அண்மைக்காலத்தில் அதிகூடிய டொலர் வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக