திங்கள், 9 செப்டம்பர், 2024

வவுனியாவில் 14 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; முன்னாள் போராளிக்கு எதிராக முறைப்பாடு

May be an image of 1 person, beard and smiling

ilakkiyainfo.com : வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்து 6 மாதம் ஆன நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (07) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான இளைஞர் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில் இது குறித்து வெளியில் தெரியப்படுத்தக் கூடாது என குறித்த முன்னாள் போராளி மிரட்டியதாகவும், தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாவட்ட செயலக சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியும், போராளிகள் நலன் சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான சந்தேகநபர் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தடைச் சடட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக