வியாழன், 16 மார்ச், 2023

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

 மாலைமலர் : சென்னை: சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வென்றார்.
இதனைத்தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்< அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக