![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNsT09AdxXT7LJBQnX1cz5xcUM2Dv2rgksfZSZOmWezcelANSf1wARzNtyLwA6f2ygjKawJBAJUe6wFbbB6chjtXw3xkofzLH7ZFPi6geCwCeMmHqgoRRELvfLXJQrLydKItWchz4lBMo/s280/_101780512_keeladiexcavationphoto.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdXvqsOaSousLggjwTF5SB_LqWCifX_1aw44ZdjihsodzgoRjjhrZKg-rSD6zznCP2r6bScJ1YhfdBnJDCxq1NwoANtCHKOoDKukldLz5EiZI06LNyMPUH2KzN5WHdztfAFHTZa1W-ZH0/s280/_101780514_7271f48a-6744-486c-98df-5da83a9ba4fc.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicy7Tr8htmWzcFvAkeTCx_4bnyRIb1jIB2NxoAeubhs3ysDTl9QuK6e0l2ND11y3H7RPDP44WpY66qsK0wUgEKcv4WpM-IxVVTH6726xzHXHz3DD49Y-QtJj3PPFpZMwrwySG7V_X05bI/s280/_101780515_d8900134-15b8-468b-89fb-c61ab584febe.jpg)
இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது.
இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரியின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதில், கீழடியில் ஆய்வுநடத்த முதலில் அனுமதி கிடைத்தது. இதன் பிறகு கீழடியில், மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய இடத்திற்கு அருகில் ஆய்வுப் பணிகள் இந்த ஆண்டில் துவங்கின. 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த ஜெகன்னாதன் பிபிசியிடம் தெரிவித்தார். <">கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
இதேபோல, சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூரில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து அங்கும் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கென 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன. 2016ல் இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சமூக - கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல தொல் பொருட்கள் கிடைத்தன. கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில தொல்லியல் துறை நடத்திவரும் இந்த ஆய்வுகளைத் தவிர, மத்தியத் தொல்லியல் துறை கொடுமணலில் ஒரு அகழாய்வை மேற்கொண்டுவருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக