மாலைமலர் :நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர்
ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #NeutrinoProject #Vaiko
#Madurai
மதுரை:
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.<
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில்
இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். <
இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர்
திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம்
ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால்
அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.<
விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது
தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும் வேதனையும்
தெரிவித்தார். அவர் விரைவில் நலம்பெற இயற்கை அன்னையை வேண்டிக்கொள்வதாக
கூறிய வைகோ, தனது நடைபயணத்தை தொடங்கினார்
சனி, 31 மார்ச், 2018
ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு ! வைகோ நடைபயண நிகழ்ச்சியில் - மதுரையில் பதற்றம்
மாலைமலர் :நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர்
ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #NeutrinoProject #Vaiko
#Madurai
மதுரை:
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.<
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில்
இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். <
இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர்
திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம்
ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால்
அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.<
விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது
தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும் வேதனையும்
தெரிவித்தார். அவர் விரைவில் நலம்பெற இயற்கை அன்னையை வேண்டிக்கொள்வதாக
கூறிய வைகோ, தனது நடைபயணத்தை தொடங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக