வியாழன், 8 மார்ச், 2018

ரங்கராஜ் பாண்டே இடைநீக்கம் ..தினகரனிடம் லஞ்சம் வாங்கினார் ... .உதவியாளர் பாஸ்கரும் பதவி இடை ..

ஊழல் புகாரில் தந்தி டிவி பீகாரி ரங்கராஜ் பாண்டே நீக்கப்பட்டதாக செய்தி. சில நாட்களுக்கு முன் எடப்பாடி மீது தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஊழல் புகார் வெளியிட்டது. இந்த செய்தியை போடக் கூடாது என தந்திடிவி நிர்வாகத்திடமும், பாண்டேவிடமும் நேரடியாக எடப்பாடி தரப்பிலிருந்து சொல்லியும் அவர்கள் கேட்காமல் ஒளிபரப்பு செய்தனர். இதனால் பாண்டேவை நீக்கவேண்டும் என எடப்பாடி தரப்பிலிருந்து நேரடியாக சொல்லப்பட்டது. ஆனால் நிர்வாகம் கேட்காமல் காலதாமதம் செய்ததால் அரசு கேபிள் டிவியிலிருந்து தந்தி டிவி நீக்கப்பட்டது. நான்கு நாட்களாக தந்திடிவி தெரியவில்லை. இதனால் பதறிப்போனது. இந்நிலையில் பாண்டே மீது ஊழல் புகார்கள் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாலும்
நிர்வாகம் புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபு, ரங்கராஜ் பாண்டே இருவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது. நிரவாகமும் இதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக