ஞாயிறு, 1 அக்டோபர், 2017

ஓரத்திலாவது வையுங்கள்.. நடிகர் பிரபு கலைஞர் திறந்த சிவாஜி சிலை ,,,,


tamiloneindia :சென்னை: சென்னை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையில் கல்வெட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை இடம்பெற செய்ய வேண்டும் என நடிகர் பிரபு கோரிக்கை விடுத்தார். சென்னை அடையாறில் அமைக்கப்பட்ட சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார். அப்போது விழாவில் பேசிய சிவாஜியின் இளைய மகன் பிரபு, நான் எம்ஜிஆரையும் கருணாநிதியையும் பெரியப்பா என்று தான் அழைப்பேன். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறும் நேரத்தில் சிவாஜியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது என் பணி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடத்தில் கூறினார். சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், கருணாநிதியின் பெயரை இந்த மணி மண்டபத்தில் ஒரு ஓரத்திலாவது இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பிரபு கூறினார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக