ஞாயிறு, 8 அக்டோபர், 2017

நடராஜனுடன், சசிகலா 15 நிமிடங்கள் மாத்திரமே சந்திப்பு ,, குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவர்

 தினத்தந்தி : ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனை, சசிகலா நேற்று 15 நிமிடங்கள் சந்தித்தார்.
 அப்போது அவரது கையை பிடித்து சசிகலா கண் கலங்கினார்.
 சென்னை, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 10–ந் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ="குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனுடன், சசிகலா 15 நிமிடங்கள் சந்திப்பு"குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனுடன், சசிகலா 15 நிமிடங்கள் சந்திப்பு" கடந்த 4–ந் தேதி அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ‘பரோல்’ கேட்டு விண்ணப்பித்த சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கடும் நிபந்தனைகளின் பேரில், 5 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் சிறையில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 10 மணியளவில் சென்னை தியாகராயநகர், அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டிற்கு வந்து தங்கினார். நேற்று காலை 11.05 மணிக்கு அங்கிருந்து கணவரை பார்ப்பதற்காக குளோபல் ஆஸ்பத்திரிக்கு காரில் புறப்பட்டார். அவருடன் இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ‌ஷகீலா, மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோரும் வந்தனர்.
பிற்பகல் 12.15 மணியளவில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கல்லீரல் மாற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை சென்று பார்த்தனர். செயற்கை சுவாசத்தில் இருந்த நடராஜனால் பேச முடியவில்லை. சசிகலாவை பார்த்ததும் அவர் கைகளை அசைத்தார். சசிகலாவும் கணவரின் கையை இறுக பற்றிக்கொண்டு கண் கலங்கினார். அங்கிருந்த டாக்டர்களிடம் அவரது உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார்.
சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த சசிகலா பின்னர் வெளியே வந்து மீண்டும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று சற்று நேரம் இருந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் அறை எண் 2006–ல் அமர்ந்து இருந்தனர். மதியம் 2 மணியளவில் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு தியாகராயநகர் இல்லம் சென்றார்.
நடராஜனுக்கு 4–ந் தேதி சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அவருடைய உடல்நிலை நல்லமுறையில் ஒத்துழைப்பு கொடுத்தது. கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நடராஜன் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது. நடராஜன் சுயநினைவுடன் இருக்கிறார். நடராஜனுக்கு 6–ந் தேதி செயற்கை சுவாசம் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது. தற்போது அவர் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேர்த்து செய்யப்பட்டுள்ளதால், அவருடைய உடல்நிலை அடுத்த சில நாட்களுக்கு சிக்கலாக இருக்கும். நடராஜன் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக