திங்கள், 25 செப்டம்பர், 2017

மாணவி அமராவதி தற்கொலை ! ஆசிரியை தனலட்சுமி பறைசாதி நாயே என்று ....

tamil.arasan. : ஒரு மாணவியை பற சாதி ஒழுங்கா படிக்கலைன்னு திட்டினக் காரணத்துக்காக தற்கொலை பண்ணிகிட்டா.
நான் 11th ல Government school ல சேருகிற நிலைமை வந்தது.அப்ப அங்க மாணவர்கள சாதிரீதியா ஒரு வகைப்படுத்தலும்,ஆசிரியர்கள் சாதிரீதியான ஒரு வகைப்படுத்தலும் இருந்துக் கிட்டு இருந்தது.ஒன்னுமில்ல என்னோட நண்பன் ஒருத்தன் special classல இன்னோரு பையன் கிட்ட வம்பு பண்ணிட்டிருந்தான்னு நினைக்கிறேன்.என்னன்னு சரியா நியாபகம் இல்லை.அப்ப "குறவன் காலனில இருந்து வர உன் புத்தி அப்படி தான் இருக்கும்"னு என்னோட physics ஆசிரியை சொன்னாங்க.
இவங்கல்லாம் தான் டீச்சராம் இந்த சமுதாயத்துல.இவங்களே தான் சொல்லுவாங்களாம் "இப்பலாம் யாரு சாதி பாக்கறான்"னு.இந்த டீச்சர் மேல வழக்கு எதுனா நீங்க தொடர்ந்தீங்கன்னு வைங்க.உடனே "அவன் மறத்தமிழன் அவன்மேல எப்படி வழக்குத் தொடருவிங்கன்"னு வருவாங்க.
சாக்கடை சுத்தம் செய்யறப்ப ஒரு தமிழ் பேசாத தலித் இருக்கற பட்சத்துல "இவன் வந்தேறி இவனுக்காகலாம் நான் குரல்குடுக்க முடியாதுன்"னும் சொல்லுவானுங்க.த்தூ


பிறப்பால ஒருத்தன தாழ்ந்தவன் உயர்ந்தவன்னு நினைக்கிற அந்த மனப்பாங்கு இருக்க எத்தனையோ பேர தமிழன் தமிழன்னு கொண்டாடிக்கறோம்.அப்படி ஒருத்தன் தமிழனா இருந்தா என்ன? ,கன்னடனா இருந்தா என்ன?
தெழுங்கனா இருந்தா என்ன?
எல்லாம் வீணா போனதுங்கதான்.
போங்கடா நீங்களும் உங்க மொழியும்
ரஞ்சித் பேசினப்ப பொங்குன தமிழனுங்க இதுக்கு வருவாங்களா?
இல்ல நந்தினி பிரச்சனையப்ப தான் வந்தீங்களா?
ஓரமா போய்டுங்க.ஒரு மனுஷன பிறப்பால தாழ்ந்தவன் உயர்ந்தவன்னு பாக்கறது பெரிய விஷியமா தெரியாத எந்த ஒரு இயக்கமும் மகா கேவலம் தான்.


பிணந்தின்னி நாய்களே
சாதி மலந்தின்னும் பன்னிகளே!
என்றடங்கும் உங்கள் பிண வெறி???
சொரனை கெட்ட தமிழ் சமூகமே!!
என்ன செய்யப்போகிறோம்?
சாதிய கொடுமைகளுக்கு எதிராக!!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு
படித்து வந்த மாணவி அமராவதியை
அதே பள்ளியில் பணி புரிந்து வரும் ஆசிரியை தனலட்சுமி பறைசாதி நாயே
உனக்கு எல்லாம் என் படிப்பு
நீ ஆடு மேய் போ என்று கூறி படிக்க வில்லை என்று அடித்து அவமானம் படித்தினார்
அதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் சாதி வெறி பிடித்த மிருகத்தால் ஒரு பெண் உயிர் போனது...
சாதி ஒழிப்புக்காக
தலித் சமூகமே!!
விரைந்து வா
போர்களம் காண!!
இவண்:
ப.செந்தமிழன்
நாமக்கல் மாவட்ட செயலாளர்
தமிழ்ப்புலிகள் கட்சி
9942862757

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக