திங்கள், 13 பிப்ரவரி, 2017

கூவத்தூர் எம் எல் ஏக்களை மீட்க திட்டம் ! போலீஸ் உதவியுடன் அதிரடி ..

கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை காபந்து முதல்வர் பன்னீர் செல்வம் போலீஸ்
பாதுகாப்புடன் சந்திப்பதாக நேற்று இரவு தகவல் வெளியாகின. ஆனால், சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனது ஆட்களுடன் சென்று கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களும், பன்னீர் செல்வமும் சந்திக்காமலிருக்க முன்னேற்பாடுகளை பரபரப்பாக செய்தார். இதனால் பன்னீர் செல்வம் அங்கு செல்லவில்லை. இதுகுறித்து பேசிய பன்னீர், அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் கூவத்தூர் செல்லவில்லை என்று கூறி இன்று தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது பன்னீர் செல்வம் இல்லாமல் அவரது ஆதரவாளர்கள் கூவத்தூர் சென்று, அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை தூக்கிவர திட்டமிட்டிருப்பதாக போலீஸ் துறையில் டென்ஷன் நிலவுகிறது. இந்த தகவல் உண்மையா என விசாரித்துக்கொண்டிருக்கும் சசிகலா, செய்தி உண்மையென்றால் எம்.எல்.ஏ.க்களுடன் இரவு தங்கிவிடுவது என்ற முடிவில் இருக்கின்றார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக