அவர் அப்பல்லோவில் டாக்டராக பணிபுரிந்ததற்கான அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவர், சம்பளப்பட்டியல்கூட எங்களிடம் உள்ளது. இதையெல்லாம் அப்பல்லோ மறுக்கமுடியாது. ஆனால், டாக்டர் ராமசீதாவுக்கு பலவிதங்களில் மிரட்டல்கள் வருவதால் அவரது செல்ஃபோன் நம்பரை ஸ்விட் ஆஃப் பண்ண சொல்லிவிட்டேன். அதனால், அவர் குறித்து எதுவாக இருந்தாலும் என்னையே தொடர்புகொள்ளுங்கள்” என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்.
நமக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. காரணம், டாக்டர் என்று சொல்லிக்கொள்ளும் ராமசீதா தொடர்ந்து ஜெ.தீபாபாவையும் அவரது கணவரையும் சந்திக்கவேண்டும் காத்துக்கொண்டிருக்கிறார் என்கிற தகவல்தான். ஜெ. தீபா தரப்பு சந்திக்க மறுத்துவிட்டதால் உடனே, ஓ.பி.எஸ்ஸை சந்திக்கப்போய்விட்டார் என்று அடுத்தத்தகவல் கிடைத்தது. ஆக, ஜெயலலிதாவின் மரண தகவல் குறித்து பரபரப்பாக பேசி அரசியலில் ஏதோ ஒரு பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இறுதியாக, ஃபுட் புராடக்ட்ஸ் நடத்திக்கொண்டிருக்கும் ராமசீதாவின் கணவர் எல். சத்யநாராயணை தொடர்புகொண்டு விசாரித்தபோது,
“ஆமாங்… அவங்க டாக்டர் இல்ல. எதுவா இருந்தாலும் வழக்கறிஞர் நளினி ஸ்ரீக்கிட்ட பேசிக்கோங்க. எங்கிட்ட எதுவும் டீட்டெய்ல் கேட்காதீங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை”என்று டென்ஷனானபடி ஃபோனை துண்டித்தார்.
இறுதியாக, நாம் அப்பல்லோ மருத்துவமனையின் டைரக்டர் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் டாக்டர் சத்யபாமாவிடம் கேட்டபோது அப்படியொரு மருத்துவரே எங்களிடம் வேலைபார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்.;
இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் தலைவர் டாக்டர் சடகோபனிடம் நாம் கேட்டபோது, “அலோபதி மருத்துவம் படிக்காமலேயே ஒருவர் அலோபதி மருத்துவர் என்று போர்டுவைத்துக்கொண்டு அலோபதி மருந்துகள் எழுதிக்கொடுத்து ஊசி போடுகிறார் என்று ஆதாரம் இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
ஆனால், இப்படி பொதுவாக டாக்டர் என்று பேட்டிக்கொடுப்பவர்கள் உண்மையிலேயே போலி மருத்துவர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் சீட்டிங் வழக்கின் மூலம் காவல்துறைதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்றார். நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக