பாஜகவின் இந்த விளையாட்டில் விஸ்வரூபமெடுத்த உன்னைப்போல் ஒருவன் எடுத்த கமலஹாசன் நிற்கிறார், மற்றும் அவரின் உறவினரெல்லாம் நிற்கிறார்கள்.
பாஜகவின் உதவி இல்லாமல் பன்னீர் செல்வம் நின்றிருந்தால் என்னுடைய ஆதரவு அவருக்குத் தான். அதிகாரத்தில் எப்போதும் இருக்கும் பிராமணியத்தைப் பிடித்து ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும் ஆட்சியைக் கலைத்துக் கொடுக்கும் வேலைக்காக மட்டுமே பயன்படும் பன்னீர் ஒரு மோசமான முன்னுதாரணம்.
அவர் பெரும்பான்மையை நிரூபிக்க அவசரம் காட்டவில்லை. பாஜகவிடம் பேசி காலம் தாழ்த்துகிறார். எனவே அவருடைய நோக்கம் ஆட்சிக்கு வருவதல்ல.
ஜெயாவின் காலில் விழ பல யோகாசனங்களைப் போட்ட பன்னீர் இப்போது தியானத்தில் பாஜகவின் நாடகத்தன் நிறைவுக் காட்சியில் நிற்கிறார். பாஜகவின் நேரடி ஆட்சி வரமுடியாதே என்று பலர் சொல்கிறார்கள். அது எப்போதும் வராது. ஆனால் பன்னீர் தான் பெரிய கதவைத் திறந்துவிட்டுள்ளார். சட்டப்படி நடக்க முடியாததால் பன்னீரின் உதவியை நாடிய மத்திய அரசு கொலைப்பழியை சசி மட்டுமே சுமக்கச் செய்து விளையாடுகிறது. உண்மையில் எனக்கு மோதி மேல் தான் சந்தேகம். அரசியலைத் தாண்டி தன்னுடைய தோழி எழுபது நாட்களில் ஒரு நாள் கூடவா வர முடியவில்லை. அவர் வந்திருந்தால் சசி தடுத்திருக்க முடியாதே. இசட் பிரிவை விலக்க மத்திய அரசின் ஒப்புதல் வேண்டுமாமே. அப்படியென்றால் மோதிக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. உயிர் விசயங்களில் மோதியை நான் நம்புவதே இல்லை.
சசிகலாவின் மாபியா இமேஜை டிஜிட்டலாக வளர்த்தெடுத்தது வசதியாகிவிட்டது. எப்போதும் ஜெயா தான் முதல் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொண்டு தான் சசிகலாவை பற்றி பேச வேண்டும்.
கடைசியாக பத்ரி ஞானி அவர்கள் எந்தப் பக்கமோ அதற்கு எதிர் பக்கம் நிற்பதே நியாயம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. தவறாகவும் இருக்கலாம். எனக்கு சுடுகாட்டில் தியானம் பண்ண வராது. முகநூல் பதிவு Elango Kallanai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக