திங்கள், 6 பிப்ரவரி, 2017

டெல்லியில் நிலநடுக்கம்.. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நடுக்கம்

நிலநடுக்கத்தின் மையம், உத்தர்கண்ட் மாநிலம் பித்தோராகர்க் பகுதியில் மையம் கொண்டிருந்தது. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நில அதிர்வானது 30 வினாடிகள் வரை நீடித்தது. பூமிக்குக் கீழே 7 கிலோமீட்டர் ஆழத்திற்குள் பூகம்பம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ரிக்டராக பதிவாகியுள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம் பலராலும் உணரப்பட்டது. அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை  tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக