திங்கள், 23 ஜனவரி, 2017

போராட்டத்தை அவமானப்படுத்தும் கொலைவெறியோடு இருக்கிறார்கள் பாஜகவினர்

நீ மூடிக் கொண்டு போடா!
Image may contain: 1 person, on stage, standing, sky, crowd and outdoor
இப்படி போராட்டத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டமும் இல்லை. அடக்கப்பட்ட உணர்வுகளின் அரசியல் வெளிப்பாடு. மோடிக்கு கோடிக்கணக்கான மக்களால் கட்டப்பட்ட பாடைதான் மெரினா எழுச்சி! இந்த போராட்டத்தை அவமானப்படுத்தும் கொலைவெறியோடு இருக்கிறார்கள் பாஜகவினர். அந்த திட்டத்தை நிறைவேற்றுக் கொடுக்க முயல்கிறார்கள் சேனாதிபதியும், ஆதியும், ராஜசேகரும். இந்தியாவுக்கு எங்கள் மாணவர்கள் வகுப்பெடுத்திருக்கிறார்கள். வெறும் டெல்லியும். ஜே.என்.யூவும் மும்பையும் மட்டுமல்ல தெற்கில் நாங்கள் நெருப்பாய் இருக்கிறோம். நாங்கள் பெரியாரின் புதல்வர்கள். ஆதியில்லை உனது தாத்தன் பாட்டன் வந்தாலும் எங்கள் உணர்வை பட்டுப் போகச் செய்ய முடியாது எங்கள் மாணவர்கள் எங்களுக்கு அந்த உணார்வை கொடுத்துள்ளார்கள். மீண்டும் கூடுவோம். கோஷமிடுவோம், பீப் சாப்பிடுவோம். மட்டனும் சாப்பிடுவோம் தனித் தமிழ்நாடு வேண்டும் என்போம். இந்தியை உதைப்போம், சமஸ்கிருதம் வேண்டாம் என்போம். கம்யூனிசத்தை உயர்த்திப் பிடிப்போம், திரவிட இயக்கதை தோளில் சுமப்போம். நீ மூடிக் கொண்டு போடா!  முகநூல் பதிவு அருள் எழிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக