திங்கள், 23 ஜனவரி, 2017

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மெரீனாவில் குவியும் மக்கள்

சென்னை : சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். இந்நிலையில் மெரினாவில் இருந்து இளைஞர்கள் வெளியேற்றப்படுவது மற்றும் மெரினா போலீசாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு வரும் தகவல் தெரிந்து, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மெரினாவில் குவிந்து வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு பெருகி வருவதால் மெரினாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பொதுமக்களையும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றளனர். கடைசி வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் சிலர் கடலுக்குள் படகில் சென்று, கறுப்புக் கொடி ஏந்திய போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக