திங்கள், 23 ஜனவரி, 2017

அறவழி போராட்ட களத்தை அடிதடிக்களமாக்கிய தமிழக அரசு

அறவழியில் கடந்த 6 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.ஒரு சிறு சங்கடங்கள் கூட ஏற்படாமல், சட்ட ஒழுங்கை மீறாமல் இன்னும் சொல்லப்போனால் போலீசாருக்கே உதவி செய்து கொண்டுபோராட்டத்தை நடத்தினார்கள் ஆனால், அரசு போலீசாரை வைத்து இரவெல்லாம் திட்டம் தீட்டி மக்கள் கூடாத அதிகாலை நேரத்தை பயன்படுத்தி மாணவர்களை வெளியேற்ற முனைவது அவர்களின் அறப்போராட்டத்திற்கு எதிரானது. போலீசாரை சாரை சாரையாக போராட்ட களத்திற்கு இறக்கி வெளியேற்றியது விரும்பத்தக்க செயலும் அல்ல என்று பலரும் இது குறித்து விமர்சிக்க தொடங்கிவிட்டனர். மேலும் தமிழக அரசு ஏற்கனவே ஸ்திரத்தன்மை இழந்து நிற்கும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருத்துகள் வெளியாகி உள்ளது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக