அதன்பிறகு, தன்னுடைய நிதித்துறை சார்ந்த ஃபைல்களை கிளியர் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தினார்'' என்கிறார்கள்.
தொடர்ந்து நாம் அவர்களிடம் பேசியபோது, ""சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று சிறைக்குச் சென்று விடுதலையாகி வந்ததிலிருந்தே ஜெயலலிதா பழைய சுறுசுறுப்புடன் இல்லை. கோட்டையில் நீண்ட நேரம் அவரால் இருக்க முடியாத நிலையால், கோப்புகள் அனைத்தும் கார்டனுக்குப் பறந்துகொண்டிருந்தன.
கார்டனிலும் கூட சில சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவை உயரதிகாரிகளால் பார்க்க முடிந்ததில்லை. அப்போதெல்லாம், கோப்புகள் மீதான விசயங்களை அதிகாரிகளுடன் சசிகலாதான் விவாதிப்பார். அதன்பிறகு, முடிவெடுக்கப்பட்ட கோப்புகளில் முதல்வரின் கையெழுத்து வாங்கிவந்து அதிகாரிகளி டம் ஒப்படைப்பதும் சசிகலாதான். எந்த கோப்புகள் க்ளியர் செய்யப்பட வேண்டுமென கார்டன் நினைக் கிறதோ அது மட்டும்தான் ஓ.கே. ஆகி வெளியே வரும், மற்றபடி கோட்டையிலும் கார்டனிலும் கோப்புகள் தேங்குவது வழக்கமான ஒன்றுதான்.
கார்டன் முதல் அப்பல்லோ வரை... 2016 தேர்தல் வெற்றிக்குப்பிறகு, ஜெயலலிதா விரும்பும்போது மட்டுமே அதிகாரிகளால் அவரை சந்திக்க முடியும் என்ற நிலை உருவானது. கோப்புகளின்மீது முடிவெடுக்கப்படுவதெல்லாம் கார்டனில்தான்.
சசிகலாவிடமிருந்தே உத்தரவுகள் வரும். குறிப்பாக, சசிகலாவின் உத்தரவுகளெல்லாம் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வரின் முதல் செயலாளர் வெங்கட்ரமணன் மூலமாக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவுக்கு சொல்லப்படும். மாநில உளவுத்துறையின் உயரதிகாரி தினசரி ரிப்போர்ட்டை முதலமைச்சரை சந்தித்து நேரடி யாக கொடுப்பது வழக்கம். அப்படி கொடுக்கும் போது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக