பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, ”ஒரு வருடம் கடந்துவிட்டது என் மகன் இறந்து , ஆனால் சினிமாத் துறை எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. என் மகன் தேசிய விருது பெற்றிருப்பதை வெற்றிமாறனின் துணை இயக்குநர் போன் செய்து எங்களுக்கு தெரிவித்தார்”. ”ஆடுகளம் உருவான வேளையில் தனுஷும், என் மகனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.
”இந்த விருதை வைத்துக்கொண்டு என்ன பண்ண, என் மகன் விருதைத் தாண்டி எதுவும் பெறவில்லை, அவனது கடின உழைப்புக்கும் , போரட்டத்துக்கும் இரண்டாவது விருதும் கிடைத்துள்ளது, அதைத் தாண்டி இந்த சினிமா என்ன கொடுத்துள்ளது ஒன்றுமில்லை. எங்கள் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூட ஆளில்லாமல் இருக்கிறோம்” என மகனை இழந்த 73 வயதான ஒரு அப்பாவாக நொந்து போயுள்ளார். vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக