சனி, 31 அக்டோபர், 2015

தாய்மையை பெருமை படுத்தும் நடிகை கஸ்துரியின் புகைப்படங்கள்!

தாய்மைக்கு பெருமை சேர்த்த நடிகை கஸ்தூரி;
புகைப்படக்காரர் ஜெடி பெல்
என்பவர் ‘தாய்மையின் தேகங்கள்’ என்ற தலைப்பில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இதற்கு உலகெங்கும் உள்ள 80 தாய்மார்கள் நிர்வாணமாக காட்சியளிக்க முன்வந்துள்ளனர். பிரசவகால பெண்களுக்கும், குழந்தைப் பெற்ற பெண்களுக்கும் இந்த புகைப்படங்கள் அர்பணிக்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில், பிரபல நடிகை கஸ்தூரியும் ஒருவராக இருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் கஸ்தூரி. பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்து தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தார். இவர் ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார் கஸ்தூரி. சமீபத்தில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஜெய்க்கு அண்ணியாக நடித்தார்.இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன் குழந்தையை அணைத்தப்படி நிர்வாணமாக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இது பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிர்வாண புகைப்படம் பற்றி நடிகை கஸ்தூரி இணையதளத்தில் விளக்கமும் அளித்துள்ளார்.அதில், குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள்.
இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார். இந்த புகைப்படம் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். nakkheeran.in

1 கருத்து: