![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhM3FZCRrDjv3dDpkLgxh_41__oqQIqWcTPD6zIOehJ65_rwFvcto7Slp1PEo2hLgMuvaz_9Pe8MkemmLGOYfT5kGY8oxvjCsITmLxeBn_ppqFirvlvadBLIxGalSLqQgXtlRv1XlwTH8/s280/201503280814113490_Kashmir-celebrates-Australias-win_SECVPF.gif.jpg)
ஆனால், ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய
அணி தோல்வி அடைந்ததை அறிந்த காஷ்மீரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதை
பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகளையும் தங்களுக்குள்
பரிமாறிக்கொண்டனர்.
வணிக வளாகங்களிலும்
தொலைக்காட்சி ஷோரூம்களிலும் நின்று ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்
இந்தியாவின் தோல்வியை கட்டித்தழுவி கொண்டாடினர். இந்தியாவின் தோல்வி பற்றி
இம்ரான் பத் என்ற காஷ்மீர் வாசி கூறுகையில், ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பான
வெற்றியை பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வி
அடைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார். திரால்,
பாராமுல்லா, குப்வாரா, காந்தர்பல், சோபோர் மற்றும் அனந்தநாக் உள்ளிட்ட பல
பகுதிகளை சேர்ந்த மக்கள், இந்திய அணியின் தோல்வியை கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக