ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

ஏ.பி.பரதன்: அதிமுக அணி அதிக இடங்கள் வென்றால் ஜெயலலிதாதான் பிரதமர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலி தாவை சந்தித்து பேசினார்.  இரு கட்சிகளும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று இந்த சந்திபில் முடிவானது. பின்னர் வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.பரதன்,  ‘’அதிமுக அணி அதிக இடங்கள் வென்றால் ஜெயலலிதா பிரதமர் ஆக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும்,   ‘’மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் நாளை ஜெயலலிதாவை சந்திக் கிறார்’’ என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக